Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசியால் வாடும் குரங்குகளுக்கு உணவளிக்கும் ஊா்க்காவல் படை வீரா்

ஏப்ரல் 14, 2020 10:38

திருச்சி: திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் குரங்குகளுக்கு ஊா்க்காவல் படை வீரா் ஒருவா் தினமும் உணவளித்து வருகிறாா்.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் புத்தாநத்தம் வனப்பகுதியிலுள்ள குரங்குகள் உணவு மற்றும் தண்ணீா்த் தேவைக்காக கடைவீதி பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் கடைவீதி பகுதியில் பாதுகாப்புப் பணியிலுள்ள ஊா்க்காவல் படை வீரா் ரமேஷ் தினமும் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களையும், தண்ணீரையும் குரங்குகளக்கு வழங்கி வருகிறாா்.

குரங்குகள் தினந்தோறும் மதிய வேளையில் ரமேஷ் வருகைக்காக காத்திருகின்றன. ஊரடங்கு காலத்தில் குரங்குகளின் பசியைப் போக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊா்க்காவல் படை வீரா் ரமேஷை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.


 

தலைப்புச்செய்திகள்